Monday, July 23, 2012

சூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு

இன்னிக்கி தேதில ஒரே சமயத்தில அதிகம் பேருக்கு  அதிகம் பிடித்தவரும் அதிகம் பேருக்கு அறவே பிடிக்காதவருமான ஒரே தமிழ் சினிமா பிரபலம் சூர்யா. அண்ணன் பத்தி நமக்கு பிடிச்ச, பிடிக்காத, சில விடயங்களின் தொகுப்பே இந்த பதிவு. அண்ணனோட பிறந்தநாள் சிறப்பு பதிவா இன்னிக்கி போடுறோம்.



சூர்யா மேல நமக்கு எப்பவுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு. அதுக்கு என்ன காரணம்ன்னா சூர்யாவ விட சரவணன் என்கிற தனிமனிதன் சாதித்து காட்டிய ஒரு விஷயம்தான். எல்லாரும் ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு திறமை ஒழிஞ்சிருக்கும், அது என்னன்னு கண்டுபிடிச்சு,வளர்த்து அதன் வழியே போறவன் ஜெயிப்பான்னு சொல்லுவாங்க. திறமை என்பது பிறப்பினால் வருவது என்பதே அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. உழைப்பு அந்த திறமையை மெருகேற்றும் என்பதே அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். ஆனால் திறமை என்பது வளர்த்துக்கொள்ளக்கூடியது மட்டுமல்ல உழைப்பினால் உருவாக்கிக் கொள்ளக்கூடியதும் என்று சாதித்துக் காட்டியவர் சூர்யா என்னும் சரவணன்.

பெரும்பாலும் இந்த பதிவ படிக்கிற நீங்க எல்லோரும் சூர்யா நேருக்கு நேர் படத்துல அறிமுகமான நாள்ல இருந்து அவர வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கறவங்களாதான் இருக்கும். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் சிவகுமார் குடுத்த மூஞ்சிய தவிர சூர்யா நடிக்க வந்தப்போ அவருக்கிட்ட எதுவுமே இருக்கல.  சரவணன் என்கிற தனி மனிதன் ரஜினி, விஜய், அஜித் போன்ற Born as Super Star கெடயாது, கமல், விக்ரம் போன்ற பிறப்பிலேயே நடிகனும் கிடையாது. உண்மைல சொல்லப்போனா பிலிம் இண்டஸ்றிகின்னு பிறந்த ஒருத்தர் கிடையாது. இன்னும் சொல்லப்போனா தம்பி கார்த்திதான் அந்த Born Star. சரவணன் இயல்பிலேயே ஒரு ரிஸர்வ்ட் பேர்ஸனாலிட்டி. தோல்விகளை கண்டு துவண்டு போகக்கூடியவர். தோல்விகளுக்கு அஞ்சியே எதயும் தொடங்க பயப்படும் ஒருவர். வாழ்கையை பற்றி ஒரு சரியான புரிந்துணர்வோ திட்டமிடலோ இல்லாதவர். சுருக்கமா சொன்னா எந்த வகையிலும் சினிமா துறைக்கு லாயக்கே இல்லாத ஒருத்தர். இன்னிக்கி இருக்கற சூர்யா என்கிற நடிகர பார்க்குறவங்களுக்கு அந்த சரவணனா இதுன்னு ஒரு ஆச்சர்யம் வரும். இது எல்லாமே சரவணனின் உழைப்பினால் வந்தது, தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் தேடலினால் வந்தது.


நடிக்க வந்ததப்புறம்  தனது வாழ்கையில் வந்த ஒவ்வொரு தோல்வியையும் ஒரு பாடமா எடுத்துக்கிட்டு மறுபடி மறுபடி பல படிகள் முன்னேறிக்கொண்டிருக்காரு சூர்யா. நீ தெரிவு செய்த துறையில் உன் முழு ஈடுபாடுட்டுடன் உழை, வெற்றி உன்னை தேடி வரும் என்பதே சரவணன் நமக்கு கற்றுத்தந்த பாடம். யார் வேணும்னாலும் எந்த துறையில் வேணும்னாலும் சரியான பயிற்சியுடன் முழு ஈடுபாட்டுடன் உழைத்தால் வெற்றி பெறலாம், தனெக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், ஆசையும் திறமையும் சேர்ந்து வரும்போதே வெற்றியும் வரும். கண்டிப்பாக வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் வருவதே. அந்த அதிர்ஷ்டத்தையும் உழைப்பால் உருவாக்கிக் கொள்ளலாம் என்பது சரவணனது வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம். இந்த காரணமே சூர்யா என்கிற நடிகர் மீது நமக்கு ஒரு சாப்ட் கார்னர் இருக்க ஒரே காரணம். 

சமீபத்துல முடிவுக்கு வந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, சூர்யாவோட இன்னுமொரு பக்கத்த காட்டிச்சு(இது தொடர்பான நமது பழைய பதிவு ஒன்று). கார்த்தியோ, இல்ல இன்னுமொரு நடிகரோ, ஏன் சிவகார்த்திகேயனோ கூட அந்த ப்ரோகிராம பண்ணியிருந்தா அந்த ப்ரோக்ராம் ஒருவேள இன்னும் ஜனரஞ்சகமா அமைஞ்சிருக்கும், ஆனா சூர்யா அந்த ப்ரோக்ராம் பண்ணிததாலதான் தமிழ் நாட்டுல எதோ ஒரு மூலையில வாழுற மனிதர்கள் பத்தி, அவங்க வாழ்கைய பத்தி நமக்கு ஈசியா தெரிஞ்சு கொள்ள கூடியதா இருந்தது. அந்த ஷோ ஒரு பெரிய ஸ்டார் நடத்திய ஷோவாக இருந்த போதும், ஒவ்வொரு எப்பிஸோடிலும் கலந்து கொண்ட ஹாட் சீட் கான்ட்டஸ்டன்ஸே உண்மையான ஸ்டார்ஸாக வெளியே தெரிஞ்சதுக்கு சூர்யாவே ஒரு பெரிய காரணம்ங்கறது எனது தனிப்பட்ட கருத்து. அதோட மட்டுமில்லாம செலிப்ரிட்டி எப்பிஸோட் முடிவுல ஜெயிச்ச பணத்த வழக்கம் போல முதியோர் இல்லத்துக்கோ, அநாதை ஆசிரமத்துக்கோ குடுக்காம கல்விக்கும், வைத்தியத்துக்கும் பயன்படச் செய்த்ததிலும் சூர்யா பங்கு அதிகம் இருக்கும் என்பது எனது கருத்து.  இனிமே சூர்யாக்கிட்ட நமக்கு பிடிக்காத விடயங்கள பார்க்கலாம். 



அண்ணனோட சினிமா வெற்றி முழுக்க முழுக்க அண்ணனோட உழைப்பினால வந்ததே ஆனாலும், luck favors the brave என்பதற்கமைவாக அண்ணனோட வெற்றிக்கு அண்ணனோட போட்டி நடிகர்கள் சறுக்கினதும் ஒரு காரணம். இது பத்தி முன்பே ஒரு பதிவுல விரிவாக அலசி இருக்கோம். இந்த மேட்டர கொஞ்ச நாளாவே  அண்ணன் சுத்தமா மறந்துட்டாரு. அது நமக்கு அறவே பிடிக்கல. சமீப காலமா ட்ரெண்டு மாறிக்கிட்டு இருக்கு அண்ணாத்தே. இப்போ நீங்க உஷாராகலன்னா நீங்க இவ்வளவு நாளும் பண்ணினது எல்லாமும் வீணா போயிடும். கமல்ஹாசனிற்கு நடந்தது கூட உங்களுக்கு நடக்கலாம். கொஞ்சம் பார்த்துக்கங்க.  அப்புறம் இப்பொல்லாம் நீங்க நானும் நடிச்சிருக்கேன், நானும் நடிச்சிருக்கேன்னு கொஞ்சம் ஓவராவேதான் அலட்டிக்கறீங்க. அத கொஞ்சம் குறைச்சிக்காங்க. இந்த வாட்டியும் மாற்றான் பட ப்ரோமோஷன் அது இதுன்னு டிவில வந்து, இந்த படத்துல நடிக்கறதுக்காகா வியட்நாம் போனேன், அந்தார்ட்டிக்கா போனேன், அந்த தாய்லாந்து ட்வின்சு என்னோட கனவுல வந்து கோச்சிங் குடுத்தாங்க, ,தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை இந்த படம் ஒசத்தும்ன்னு கத விட்டீங்க கொல வெறி ஆயிடுவேன். 

இன்னுமொரு மேட்டர், இது அண்ணாத்தே பத்தி கெடயாது, அவரோட விசிறிகள் பத்தி. நிஜமா அண்ணனூட விசிறிகள்ள பாதிப்பேருக்கு மேல முன்னொரு காலத்துல தல அல்லது தளபதி விசிறிகளா இருந்தவங்கதான், இவங்கதான் அடிக்கடி இந்த தல தளபதி விசிறிகள சீண்டிப் பாக்குறவங்க, நீங்க கொஞ்சம் பக்குவமா இருந்துக்கங்க, இல்லன்னா உங்களாலேயே இப்போ அதிகம் பேருக்கு அண்ணாத்தைய புடிக்காம போயிருச்சு, இது நீண்டுச்சுன்னா, இப்போ தல தளபதி இருக்கற பார்முக்கு சூர்யா ரொம்ப கஷ்டப்பட்டு போயிருவாரு, பார்த்துக்கங்க. அப்புறம் சூர்யாவ கேவலமாக கலாய்க்கிற தல தளபதி பான்ஸ், சூர்யா என்கிற தனி மனுஷன், நடிப்புல தல தளபதிக்கு போட்டியா இருந்தாலும், சினிமாவ தாண்டி அவருக்கிட்டையும் எடுத்துக்குறதுக்கு நாலு விஷயம் இருக்கு, அதுக்காகவது கொஞ்சம் மரியாத குடுங்க.


அப்புறம் அண்ணனுக்கு ஒரு சின்ன ரிகுவெஸ்ட், உங்க ஷக்தி(பிதாமகன்), சின்னா(பேரழகன்), பாலையா(மாயாவி) காரெக்டர்ஸ் இன்னும்  அப்புடியே மனசுல நிக்குது, சீக்கிரமா அது போல ஒரு ஜாலி கேரக்டர் பண்ணுங்க சார். ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கோம். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா. மாற்றான் வெற்றிக்கும், தொடர்ச்சியான வெற்றிகளுக்கும் வாழ்த்துக்கள். 

டிஸ்கி: என்னோட வாழ்கையில நான் ஆசைப்பட்ட ஒரு துறைய தெரிவு செய்து ஒரு கட்டத்துல தவறான முடிவ எடுத்துட்டோமோ, நமக்கு இந்த துறையில திறமை இல்லையோன்னு யோசிக்கிட்டு இருந்தப்போ சூர்யாவோட வாழ்கதான் ஒரு பெரிய திருப்பு முனையா இருந்திச்சு, அதுக்கு என்றென்றும் கோடி நன்றிகள் சூர்யா. 

7 comments:

  1. சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...!

    ReplyDelete
  2. சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இந்த நல்ல நாளில அவர திட்ட வேணாமே ..பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சூர்யா மிகச்சிறந்த உழைப்பாளி மற்றும் திறமைசாலி. ஆனா அண்ணன் அடிக்கிற சொம்பு சத்தம்தான் தாள முடியவில்லை. அவற்றை எல்லாம் இவர் மெனக்கெட்டு செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி பாலா..

      Delete
  5. சூர்யாவை பற்றி சிறப்பான அலசல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்..

      Delete

உங்கள் கருத்துக்கள்!!